Saturday, November 15, 2008

Song Lyrics of Adiye Kolluthu


Movies - Tamil - Varanam Aayiramsounder
Posted on Sep-30-2008
Song Lyrics of Adiye Kolluthu

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே


ஆண்: இரவும் பகலும் உன் முகம்
இரயைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவது ஏனோ


பெண்: வாடை காற்றென ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்பதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது என் மீது பாய்ந்தாய்
மழை காலத்தில் சரியும்
மண் மலை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே

ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்த கணமே உன்னை மறப்பேனே

பெண்: சொல்லா வார்த்தையின் சுகமே
மெய் தூங்கிப் போனதே என்மீது உள்ளது
எல்லா வானமும் நீதான்
சில நேரம் மாத்திரம் செந்தூரமாகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்த்திடுதே
என் காலை நேரம், என் மாலை வானம்
நீ இன்றி காய்ந்திடுதே

Comments
Related Tags: song, Lyrics, Tamil, Movie, Varanam Aayiram, Adiye Kolluthu

No comments: